ஒரு விதவைப் பெண், நல்ல வழில தன் குடும்பத்தைக் கரையேத்த முடியாத சூழ்நிலையா இங்க இருக்கு?



நம்மோட சில தலைவர்களும், நடிகர்களும் விதவைத் தாயால் வளர்க்கப்பட்டவங்க தானே? அந்தத் தாய்களும் ‘சீக்கிரம் செட்டில் ஆகணும்’னு அந்தத் தொழில்ல இறங்கலையே..கஷ்டப்பட்டு உழைச்சுத் தானே தன் பிள்ளைகளை அவங்க பெரிய ஆளாக்குனாங்க?

கொத்து வேலை பாக்குற பெண்கள், பட்டாசுத் தொழிற்சாலைல வேலை பார்க்குற பெண்கள், டெய்லர்கள்னு எத்தனை எத்தனை உழைப்பாளிங்க நமக்கு மத்தியில இருக்காங்க..

அப்படி இருக்கும்போது, இந்த விபச்சாரிகளுக்கு மட்டும் வாழ முடியாத நிலை எப்படி வந்துச்சு?

சிலபேர் ரவுடிக் கும்பலால் கடத்தப்பட்டு, கட்டாயமாக இந்தத் தொழில்ல ஈடுபடுத்தப் படுறதாச் சொல்றாங்க. அவங்களை மீட்டு, நல்ல வாழ்க்கைக்கு அவங்க திரும்ப உதவலாம். அதை விட்டுட்டு, பரிதாபம் காட்டுறேங்கிற பேர்ல அவங்க செய்யுற தொழிலை சரின்னு ஒத்துக்கிறது நியாயமா?

நாகரீகம்ங்கிற பேர்ல ரொம்ப ஓவரா கனிவு காட்டுறமோன்னு தோணுது.

எப்படி யோசிச்சும் இந்த விபச்சாரிகள் மரியாதைக்கு உரியவர்களா என்பது எனக்குத் தெரியலை..என்ன தான் கோட்டுசூட்டுப் போட்டாலும் உள்ளுக்குள்ள நான் இன்னும் ‘கிராமத்துக் கோவணாண்டி’ தாண்ணே..அதனால யாராவது நாகரீகமானவங்க பின்னூட்டத்துல எனக்குப் புரியற மாதிரி விளக்குனா, புண்ணியமாப் போகும்.